Home Local news வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் லீசிங் நிறுவனங்களுக்கு சிக்கல்

வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் லீசிங் நிறுவனங்களுக்கு சிக்கல்

8

லீசிங் நிலுவைத் தொகை காரணமாக வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு சிக்கலான நிலை உருவாகியுள்ளது.

அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த நாட்களில் அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் போது குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொண்டிருந்த பலர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்ததாக தெரியவருகிறது.

அவ்வாறான விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை சம்பாதித்திருந்த நிலையில் குறித்த செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Previous articleஇன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு !
Next articleவைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு