Home Accident News பஸ் விபத்தில் 15க்கும் அதிகமானோர் பாதிப்பு

பஸ் விபத்தில் 15க்கும் அதிகமானோர் பாதிப்பு

13

கண்டி-பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.

கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கிச் சென்ற பஸ்ஸூம், பண்டாரவளையிலிருந்து அதே வழியில் கண்டியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவித்த போது பலத்த காயங்களுடன் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும், ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் விபத்தில் 15க்கும் அதிகமானோர் பாதிப்பு - mutamil News - 24x7 Tamil Breaking News Website பஸ் விபத்தில் 15க்கும் அதிகமானோர் பாதிப்பு - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleஆடை தொழிற்சாலையில் பணிப்புரியும் பெண் கடத்தல்
Next articleகடலுக்குள் கார் ஓட்டிய விரிவுரையாளர் வைத்தியசாலையில்